அலங்கார உபகார மாதா திருத்தலம் கன்னியாகுமரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→திருத்தலமாக அறிவிக்கப்படல்: மேற்கோள் இணைப்பு |
|||
வரிசை 14:
==திருத்தலமாக அறிவிக்கப்படல்==
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயம் திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1544-ம் ஆண்டு தூய பிரான்சிசு சவேரியார் கன்னியாகுமரி மகிழ்ச்சி மாதா ஆலயத்துக்கு வருகை தந்தார். பழமைவாய்ந்த இந்த ஆலயத்தில் சவேரியார் திருப்பண்டம் அடங்கிய கதிர் பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 7 புனிதர்களின் திருப்பண்டம் அடங்கிய வெள்ளிப் பாத்திரமும் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு அற்புதங்கள் நடைபெற்று வருகின்றன{{ஆதாரம்}}. உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உள்ளூரில் இருந்து இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தோரும் வருகின்றனர். இந்நிலையில், திருச்சபை சட்டத்தின் கீழ் 2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சனிக்கிழமை காலை நடைபெற்ற தேதி திருவிழா திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் இந்த ஆலயத்தைத் திருத்தலமாக அறிவித்துள்ளார்<ref>[http://www.dinamani.com/edition_thirunelveli/article711251.ece கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயம் திருத்தலமாக அறிவிப்பு] தினமணி, செப்டம்பர் 25, 2011.</ref>.
==மேற்கோள்கள்==
{{reflist}}
==வெளியிணைப்புகள்==
|