சிவரஞ்சனி
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
சிவரஞ்சனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2)சாதாரண காந்தாரம் (க2), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
ஆரோகணம்: | ச ரி2 க2 ப த2 ச் |
அவரோகணம்: | ச் த2 ப க2 ரி2 ச |
- இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ" இராகம் எனப்படுகின்றது.
- மத்திமம், நிஷாதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
- இவ்விராகத்தின் ரிஷப, காந்தார மூர்ச்சனைகளே முறையே ரேவதி, சுநாதவினோதினி ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன.
மேற்கோள்கள்
- ↑ Music Handbook - Raga Index -S 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புக்கள்
சுத்த மத்திம இராகங்கள் |
| ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிரதி மத்திம இராகங்கள் |
| ||||||||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவரஞ்சனி&oldid=2499035" இலிருந்து மீள்விக்கப்பட்டது